FIFA World Cup 2022 : இங்கிலாந்து அணி அபாரம்.. சோகத்தில் முடிந்த செனகல் அணியின் பயணம்!!
![FIFA World Cup 2022 : இங்கிலாந்து அணி அபாரம்.. சோகத்தில் முடிந்த செனகல் அணியின் பயணம்!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1301.jpg)
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 தொடங்கி தற்போது சுற்று 16க்கான நாக் அவுட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சூப்பர்-16 நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து மற்றும் செனகல் அணிகள் அல் பேட் மைதானத்தில் விளையாடினார்கள்.
இந்த போட்டியில் இருஅணிகளும் தங்கள் அடுத்த நிலை வாய்ப்பை அடையும் நோக்கில் முழுவீச்சில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இங்கிலாந்து அணியின் மிரட்டலான ஆட்டத்திற்கு
செனகல் அணி எதிர் ஆட்டத்தை காட்டுமா என்ற நிலையில் தொடங்கிய போட்டியியின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் தனக்கு அடித்த பந்தை வாங்கிய இங்கிலாந்து வீரர் ஹென்டர்சன் தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.
அடுத்தாக முதல் பாதியின் முடிவில், கிடைத்த கூடுதல் நேரத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் ஒரு கோலை அடித்தார். இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் தனது அணியின் கோலுக்காக செனகல் அணி வீரர்கள் எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. ஆனால் போட்டியில் தொடர்ந்து முன்னிலை வகித்த இங்கிலாந்து அணிக்கு சாதகமாக போட்டியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இதனால் போட்டியின் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி செனகல் அணியை வென்றது.
அடுத்தாக நடக்கவிருக்கும் காலிறுதியில் இங்கிலாந்து அணி கடந்த உலக சாம்பியனான பிரான்ஸ் அணியுடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.