'இந்திய அணியை உலகின் தலை சிறந்த அணியாக மாற்றுவோம்..!'- கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜூன் உறுதி
!['இந்திய அணியை உலகின் தலை சிறந்த அணியாக மாற்றுவோம்..!'- கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜூன் உறுதி](https://www.sportspartans.com/assets/uploads/news-2336.jpg)
இந்திய கூடைப்பந்து அணியை உலகின் தலை சிறந்த அணியாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என இந்திய கூடைப்பந்து சம்மேளத்தின் புதிய தலைவர் ஆதவ் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள். இந்த தேர்தலில் நம் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆதரவு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். 38-01 என்ற இந்த முடிவுகள் நீங்கள் எந்த அளவிற்கு மாற்றத்தை விரும்புகிறீர்கள் என்பதை எனக்கு தெளிவாகக் காட்டியுள்ளது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு புதிய பாதையில் பயணத்தைத் துவங்குவோம். இதன் மூலம் நம் நாட்டில் கூடைப்பந்து விளையாட்டிற்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தையும், நம் இந்திய அணி உலக அளவில் தலைசிறந்து விளங்கும் அணியாக மாறவும் பணியாற்றுவோம். புதிதாகப் பதவியேற்கவுள்ள அனைவரின் சார்பாகவும் இந்த நன்றியைப் பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜூன் தமிழகதைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.