6 தங்கம் உட்பட 14 பதக்கங்கள்.. இந்திய பாரா பேட்மிண்டன் அணி அசத்தல்!!
![6 தங்கம் உட்பட 14 பதக்கங்கள்.. இந்திய பாரா பேட்மிண்டன் அணி அசத்தல்!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1304.jpg)
பாரா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுகந்த் கடம் தலைமையிலான இந்திய பேட்மிண்டன் வீரர்கள், பெரு நாட்டின் லிமாவில் நடைபெற்ற பெரு பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனல் போட்டியில் 6 தங்கப் பதக்கங்களை வென்றதோடு, மொத்தம் 14 பதக்கங்களை (6 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம்) கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் எஸ்எல் 4 பிரிவில் உலகின் நம்பர்-3 வீரரான சுகந்த் கடம் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் சீ ஹியோங் ஆங்கைத் தோற்கடித்தார். அதே நேரத்தில் நேஹால் குப்தா எஸ்எல்3 போட்டியில் பிரான்சின் மாத்தியூ தாமஸை 21-16 21-14 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
"முடிவில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். எனக்கு ஒரு நல்ல ஆண்டு கிடைத்தது. அடுத்த ஆண்டும் இதே நிலைத்தன்மையுடன் தொடருவேன் என்று நம்புகிறேன்.” என்று 2022 பாரா உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற கடம், பட்டத்தை வென்ற பிறகு கூறினார்.
பெண்கள் பிரிவில், நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மந்தீப் கவுர் எஸ்எச்6 மற்றும் எஸ்எல் 3 ஒற்றையர் பிரிவுகளில் பட்டங்களை வென்றனர்.
நித்யா 21-6, 21-13 என்ற செட் கணக்கில் பெருவின் கியுலியானா போவெடா புளோரஸை தோற்கடித்த நிலையில், மந்தீப் 21-11, 21-11 என்ற செட் கணக்கில் உக்ரைனின் ஒக்ஸானா கோசினாவை வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் ஜோடி நேஹால் மற்றும் ப்ரெனோ ஜோஹன் (எஸ்எல்3-எஸ்எல்4) மற்றும் பெண்களுக்கான இரட்டையர் ஜோடியான பருல் பர்மர் மற்றும் வைஷாலி நிலேஷ் படேல் (எஸ்எல்3-எஸ்யு5) ஆகியோர் அந்தந்த நிகழ்வுகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
நேஹால் மற்றும் ப்ரெனோ, பெரு ஜோடியான ரென்சோ டிக்யூஸ் பான்சஸ் மோரல்ஸ் மற்றும் பெட்ரோ பாப்லோ டி வினாடியா ஜோடியை 21-16 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். பருல் மற்றும் வைஷாலி 21-17 21-19 என்ற கணக்கில் பெருவின் கெல்லி எடித் அரி எஸ்கலாண்டே மற்றும் மன்தீப் 21-197 21-197 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.