ஏ சாலா கப் நமதே.. தட்டித் தூக்கிய சிந்து.. சிங்கப்பூர் ஓபன் 500இல் அசத்தல்!!
இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் 500 பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜி யியை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
கடினமாக போராடிய டைட்டில் மோதலில், ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற 22 வயதான வாங்கை எதிர்த்து 21-9 11-21 21-15 என்ற கணக்கில் போராடி சிந்து வெற்றி பெற்றார்.
வரும் ஜூலை 28ஆம் தேதி இங்கிலாந்தில் பர்மிங்காமில் தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் சிந்துவுக்கு இந்த டைட்டில் வெற்றி ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்.
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் தவிர சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் ஸ்விஸ் ஓபனில் இரண்டு சூப்பர் 300 மாற்றம் உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைக் கொண்ட பிவி சிந்துவுக்கு சூப்பர் 500இல் இது முதல் பதக்கமாகும்.