ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஓய்வு குறித்து ரெய்னா கொடுத்த அப்டேட்..!!
![ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஓய்வு குறித்து ரெய்னா கொடுத்த அப்டேட்..!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1907.jpg)
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மிக விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் எல்லாம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐபிஎல் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட முன்னணி அணியாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடையாளமாக உள்ளவர், அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தான் என்று கூறினால் மிகையில்லை.
இந்நிலையில் இந்த 2023 ஐபிஎல் தொடரின் இறுதியில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப் போவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் தோனி கடந்த ஆண்டில் ஒரு பேட்டியில் ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறும் என்று இடம்பெறும் என்று கூறினார்.
அதேபோல் 3 ஆண்டுகள் கழித்து அனைத்து அணிகளும் தங்களின் ஹோம் கிரௌண்டில் விளையாட உள்ளார்கள். அதன்படி சென்னை அணியும் தனது ஹோம் கிரவுண்டான சேப்பாக்கத்தில் விளையாட உள்ளது.இந்நிலையில் தோனி இந்த ஐபிஎல் இறுதியில் ஓய்வை அறிவிப்பாரா ..?? என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் மற்றும் தோனியின் நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னா தோனி ஓய்வு குறித்து முக்கிய தகவல் அளித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் ரெய்னா தோனி ஓய்வு குறித்து பேசினார், இதில் தற்போதைய நிலையில் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை என்று கூறினார்.அதாவது தோனி தற்போது சிறப்பான உடற்தகுதியின் நல்ல பார்மில் உள்ளது போல தான் எனக்கு தெரிகிறது. இந்நிலையில் அடுத்து ஆண்டு கூட ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்து தான் அவரது ஓய்வு பற்றிய முடிவு இருக்கும் என்று கூறினார். இந்த பதிவை பார்த்த தோனி ம்,மற்றும் சென்னை அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இந்த செய்தியை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.