டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் ஒரு வீரருக்கு இடம் உறுதி ..! கங்குலி கணிப்பு..!!
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது, இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு வீரருக்கு கட்டாயம் இடம் உண்டு என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய பார்டர் கவாஸ்கர் தொடரை 2-1 என்ற நிலையில் கைப்பற்றி அசத்தியது, மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதில் போட்டியாக இருந்த இலங்கை அணி அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் புள்ளிகளில் பின்தங்கியது எனவே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி அடைந்ததில் இருந்து , இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பல கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது, இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இளம் வீரர் சுப்மான் கில் இடத்தை உறுதி செய்து விட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்கள் இடத்தில் ரோஹித் சர்மாவுடன் யாரை களமிறங்குவது என்று மிகவும் குழப்பத்தில் இருந்தது, அந்த சமயத்தில் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்.
இது குறித்து பேசிய சவுரவ் கங்குலி கில் 4வது டெஸ்ட் போட்டியில் சதம் அடைந்ததன் மூலம் டெஸ்ட் அணியில் தனது இடத்தை உறுதி படுத்தி விட்டார் என்று கூறினார்,மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒருநாள் மற்றும் டி 20 தொடர் இரண்டிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்கள் அடித்த கில் தனது சிறந்த பார்மில் உள்ளதால் இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ளார் எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் சுப்மான் கில் கண்டிப்பாக இடம் பெற்று விட்டார் என்று கூறினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் ஜூன் 7ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.