இஷான் கிஷானுக்கு அடித்த ஜாக்பாட்..! இந்திய அணியின் கேப்டன் உறுதி..!
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஹைதராபாதில் முதல் ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன, இந்த தொடரில் இந்திய அணியில் சில முன்னணி வீரர்கள் இடம்பெறாத நிலையில் அணியில் இஷான் கிஷான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் இடையில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது, இந்நிலையில் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார்,எனவே அவருக்கு பதிலாக இளம் வீரரான இஷான் கிஷான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்துவதில் வல்லவர், வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.இதுவரை ஒருநாள் தொடர்களில் ஒரு சில வீரர்களே இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷானுக்கு இலங்கை எதிரான தொடரில் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை, ஏற்கனவே சுப்மன் கில் அந்த இடத்தில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்ததால் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணிக்கு எதிராக நல்ல போட்டி நிலவும் என்று எதிர்பார்க்க படுகிறது,எனவே இஷான் கிஷானின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணி அனைத்து ஒருநாள் போட்டிகளையும் உலகக்கோப்பை போட்டியாக கருதி தனது முழு பங்களிப்பையும் அளிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.