பஞ்சாப் கிங்ஸ் அதிரடியில் கொல்கத்தா அணி சிதறியது..!! அர்ஷ்தீப் சிங் கலக்கல்..!! | pbks defeated kkr 2023
![பஞ்சாப் கிங்ஸ் அதிரடியில் கொல்கத்தா அணி சிதறியது..!! அர்ஷ்தீப் சிங் கலக்கல்..!! | pbks defeated kkr 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2001.jpg)
ஐபிஎல் 2023 தொடரின் 3 வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஷிகர் தவான் தலைமையில் ஆனா பஞ்சாப் கிங்ஸ் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்திய முன்னணி வீரர் பானுக ராஜபக்ச 50(32) 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரி அடித்து அரை சதத்தை பதிவு செய்தார். அதன்பின் கேப்டன் ஷிகர் தவான் உட்பட களமிறங்கிய அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 191 ரன்கள் பதிவு செய்து அசத்தியது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலிங்கை ஏன் தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்டிங் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் மந்தீப் சிங் 2(4) மற்றும் அங்குல் ராய் 4 (5) பஞ்சாப் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம் ஆட்டமிழந்து வேகமாக பெவிலியன் திரும்பினார்கள்.
அதன்பின் கொல்கத்தா அணியின் இம்பாக்ட் பிளேயராக பவுலர் வருண் சக்கரவர்த்தி பதில் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் களமிறக்க பட்டர். இந்த போட்டியில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி வந்த இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 22(16) ரன்கள் பதிவு செய்து நாதன் எல்லிஸ் இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் கொல்கத்தா அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.
கொல்கத்தா அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரசல் 35(19) சாம் கர்ரன் இடம் ஆட்டமிழந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றி உறுதியானது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.இதனை அடுத்து போட்டியில் நடுவில் மழை குறுக்கிட்டதால் கொல்கத்தா அணி 16 ஓவர்கள் 146 ரன்கள் பதிவு செய்திருந்த நிலையில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மழை தொடர்ந்து அதிகரித்ததால் டிஎல்எஸ் முறையில் கொல்கத்தா அணி 7 ரன்கள் பின்தங்கி இருந்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தலைமையில் ஆன பஞ்சாப் அணி வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.