உம்ரன் மாலிக்கிற்கு சவால்விட்ட இளம் பாகிஸ்தான் வீரர்..!! வேகத்தில் மோதல் ..!!
![உம்ரன் மாலிக்கிற்கு சவால்விட்ட இளம் பாகிஸ்தான் வீரர்..!! வேகத்தில் மோதல் ..!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1796.jpg)
இந்திய அணியின் இளம் வேகப்பந்து பவுலர் உம்ரன் மாலிக் 150 கிலோமீட்டர் வேகத்தில் அசால்டாக பவுலிங் செய்து அசத்தும் திறன் வாய்ந்த வீரர், இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் பவுலர் விரைவில் உம்ரன் மாலிக்கை விட வேகமாக பவுலிங் செய்வேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து பவுலர் உம்ரன் மாலிக் தனது அதிரடி வேகத்தில் அசத்தி இந்திய அணியில் இடம் பெற்றார், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பெற்றுள்ள உம்ரன் மாலிக் மிரட்டல் வேகத்தில் எதிரணி வீரர்களை திணறடி அசத்தினார்,தற்போதைய நிலையில் இந்திய அணியின் அதிவேக பவுலராக வலம் வருகிறார்.
ஐபிஎல் தொடரில் 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்தார், பிறகு சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி சர்வதேச போட்டியில் வேகமாக பந்து வீசிய இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அதிக வேகமாக பந்து அசத்தி வரும் இளம் வீரர் இஹ்ஸானுல்லாஹ் உம்ரன் மாலிக்கை விட வேகமாக பந்து வீசி சாதனை புரிய உள்ளேன் என்று கூறியுள்ளார். அதாவது உம்ரன் மாலிக் 157 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் வீரர் இளம் வீரர் இஹ்ஸானுல்லாஹ் 160 கிலோமீட்டர் வேகத்தில் விரைவில் பந்து வீச முயற்சி செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு பவுலர்கள் வேகத்திற்கு பேர் போனவர்கள், அந்த வரிசையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அசத்தி வரும் 20 வயது இளம் வீரர் வலது கை பவுலர் இஹ்ஸானுல்லாஹ் விரைவில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் இருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.