இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலியை மீண்டும் நியமிக்கலாம்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து

மும்பை: இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வுக் குழு நியமிக்க நினைத்தால், விராட் கோலி மீண்டும் வாய்ப்பு வழங்கலாம் என்று தேர்வுக் குழு முன்னாள் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது. அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.
வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூலை இரண்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றது.2023-2025 ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்த டெஸ்ட் தொடர இடம் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக இது கருதப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியா வலிமையான டெஸ்ட் அணியாக உருவானது. அவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இலங்கை வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய விராட் கோலி, திடீரென டெஸ்ட் தொடரில் கேப்டன் பகுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கேப்டன் பதவியில் ரோகித் சர்மா வந்த அமர்ந்தார். இருப்பினும் அவர் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு விலகுவதாலும், சரியான கேப்பிடன்சி இல்லாததன்னாளும் சமீப காலமாகவே இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது.
இந்திய அணி சர்வதேச அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக இருந்தவர் எம்எஸ்கே பிரசாத். இந்நிலையில் அவர் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார் .
இது தொடர்பாக செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியின் போது, ரோகித் சர்மா கேப்டன்சியில் இருந்து விலகினால் விராட் கோலியை நியமிக்கலாம். ஒருவேளை டெஸ்ட் கேப்டன்சியை மாற்ற தேர்வுக் குழுவினர் எண்ணினால், விராட் கோலியால் இந்திய அணியை சிறப்பாகவே தலைமை தாங்க முடியும். ஆனால் மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்பது தொடர்பாக விராட் கோலி என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.