முகமது சிராஜ் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..! தாய், நண்பர்கள் மகிழ்ச்சி பதிவு..!
![முகமது சிராஜ் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..! தாய், நண்பர்கள் மகிழ்ச்சி பதிவு..!](https://www.sportspartans.com/assets/uploads/news-1608.jpg)
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் ஒருநாள் போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடினார்கள்,இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அணியின் வேகப்பந்து பவுலர் முகமது சிராஜ் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என்று பதிவு செய்தார்.
இந்த போட்டியில் இந்திய மிகவும் அதிரடியாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது,இதற்கு முக்கிய காரணம் அணியின் பௌலர்கள் என்று கூறலாம். இந்திய அணி முக்கிய பவுலர் ஜாஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.அந்த இடத்தை யார் நிரப்புவார் என்று அனைவரும் எதிர்பாராத நிலையில் இந்திய அணியின் முன்னணி பவுலராக முகமது சிராஜ் அசத்தி வருகிறார்.
இந்திய அணி சார்பில் கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த முகமது சிராஜ் ஒருநாள் தரவரிசையில் 3-வது இடத்தை பெற்று தனது திறனை நிரூபித்தார்.இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் அதே போல் அதிரடி பௌலிங்கை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த போட்டியில் முகமது சிராஜ் உடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறியது என்று தெரிய வந்தது, அதாவது இந்திய அணிக்கு சிராஜ் தேர்வாகி 6 வருடங்கள் ஆகிறது ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளாகி தற்போது சிறந்த பௌளராக உள்ள சிராஜ் பல நாட்களாக தன் சொந்த மண்ணில் சொந்த மக்கள் முன்னிலையில் இந்திய அணிக்காக தனது பவுலிங் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.
அந்த பல வருட ஆசை நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிராஜ் உடைய சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடந்ததன் மூலம் நிறைவேறி உள்ளது ,மேலும் இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 ஓவர்கள் மெய்டன் செய்து வெறும் 46 ரன்களை அளித்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிராஜ் கலக்கியுள்ளார்.
இந்த போட்டி முடிந்த பிறகு சிராஜின் குடும்பத்துடன் பேசிய பொழுது தனது மகனின் ஆசை நிறைவேறியதாக அவரது தாய் நெகிழ்ச்சியுடன் கூறினார்,மேலும் இந்திய அணிக்காக தனது மகன் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறினார்.இந்த பதிவை பார்த்த பல இந்திய ரசிகர்கள் சிராஜின் கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.