முதல் வெற்றிக்கான தேடலில் டெல்லி மற்றும் மும்பை மோதல் …!! அணியில் புதிய மாற்றங்கள்..?? | ipl delhi vs mumbai 2023
![முதல் வெற்றிக்கான தேடலில் டெல்லி மற்றும் மும்பை மோதல் …!! அணியில் புதிய மாற்றங்கள்..?? | ipl delhi vs mumbai 2023](https://www.sportspartans.com/assets/uploads/news-2075.jpg)
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருகிறார்கள், இரு அணிகளிலும் முன்னணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதால் தொடர் தோல்விகளை அணிகள் சந்தித்து வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
டெல்லி சாப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரை 2023 தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியை தழுவியுள்ளது, டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் தான் தனி ஒருவராக அனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அணியில் ரன்கள் பெற தவித்து வரும் துவக்க வீரர் பிரித்வி ஷா இடத்தில் புதிய வீரர் அணி நிர்வாகம் களமிறங்குமா..?? அல்லது மேலும் ஒரு வாய்ப்பை அணி நிர்வாகம் பிரித்வி ஷாவுக்கு வழங்குமா…?? என்று இந்த போட்டியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் விக்கெட் கீப்பர் இடத்தில் வெளிநாட்டு வீரர் பில் சால்ட் களமிறக்கப்படுவாரா ..?? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது, கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இளம் வீரர்கள் திலக் வர்மா மற்றும் இஷான் கிஷான் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்னும் சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் 2023 தொடரில் வெளிப்படுத்தவில்லை, எனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி பேட்டிங்கை ரோஹித் சர்மா வெளிப்படுத்துவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மேலும் அணி சார்பில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இன்னும் அணியின் வெற்றிக்கு எந்த விதத்திலும் உதவும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டியில் முதல் வெற்றியை கட்டாயம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இரு அணிகளும் கடந்த போட்டிகளில் நடந்த தவறுகளை சரி செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.