மேக்ஸ்வெல்லின் அசுர ஆட்டம்...ராஜஸ்தான் அணிக்கு டார்கெட் பிக்ஸ்! | IPL 2023 RCB vs RR 1st Innings Highlights
![மேக்ஸ்வெல்லின் அசுர ஆட்டம்...ராஜஸ்தான் அணிக்கு டார்கெட் பிக்ஸ்! | IPL 2023 RCB vs RR 1st Innings Highlights](https://www.sportspartans.com/assets/uploads/news-2162.jpg)
ஐபிஎல் 2023 தொடரின் 32 வது லீக் போட்டியில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பௌலிங்கை தேர்வு செய்தார். இதனால் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ஃபா டு பிளெசிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். இவர்களின் ஆட்டத்தை அடக்க ராஜஸ்தான் அணியில் இருந்து போல்ட் முதல் ஓவர் பௌலிங் செய்தார். அதில் துரதிஷ்ட வசமாக கோலி சிக்கிக்கொண்டார். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விராட் கோலி zero ரன்களில் அவுட் ஆகிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து டு பிளெசிஸ்-க்கு கை கொடுக்க விளையாட வந்தார் அஹ்மத். ஆனால் பெங்களூரு அணிக்கு ஆரம்பம் சற்று சிரமமாகத் தான் இருந்தது. ஏனெனில் இரண்டாவது ஓவரில் அஹ்மத் அவர்களும் 2 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். பெங்களூரு அணி அவ்ளோ தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில் டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை நிலையை தலைகீழாக மாற்றி விட்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக அடிக்க ஆரம்பித்தனர் டு பிளெசிஸ் (62) - மேக்ஸ்வெல் (77). இருவரின் பார்ட்னர்ஷிப்பில் பெங்களூரு அணி 140 ரன்கள் எடுத்தது. இவர்களால் பல ஓவர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அந்த தடுமாற்றமான சமயத்தில் ஒரு வழியாக 13வது ஓவரில் டு பிளெசிஸ் ரன்-அவுட் ஆகினார். என்னடா இப்படி ஆகிவிட்டதே சரி அடுத்து பெங்களூர் அணியை வழிநடத்தி செல்ல மேக்ஸ்வெல் இருக்கிறார் என்று நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் 14வது ஓவர் முடிவில் அஸ்வினின் பந்து வீச்சில் மீள முடியாமல் சிக்கி விட்டார் மேக்ஸ்வெல்.
இவர்களைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் மற்றும் சுயாஷ் பிரபுதேசாய் பெங்களூரு அணியின் வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தனர். ஆனால் ஜாம்பவான்களின் விக்கெட்கள் இவர்களுக்கு சற்று தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர். அப்படி இருந்து சுயாஷ் வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து தினேஷ் கார்த்திக்கு பக்க பலமாக களமிறங்கினார் வனிந்து ஹசரங்க. ராஜஸ்தானின் பந்து வீச்சை தூக்கி விலாசாமல் பொறுப்பாக ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர். பெங்களூரு அணி 19 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்தது. இதுவரை எடுத்த ரன்கள் ராஜஸ்தான் அணிக்கு மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்.
இந்த போட்டியில் இறுதி ஓவரில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் சுயாஷ் இருவரும் அடுத்தடுத்து ரன்-அவுட் ஆகினர். ஓவர் முடிய இன்னும் மூன்றே பந்துகள் இருக்கும் நிலையில் டேவிட் வில்லி மற்றும் முஹம்மத் சிராஜ் இருவரும் பேட்டிங் செய்தனர். முதல் இன்னிங்ஸில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து நிறைவு பெற்றது. ராஜஸ்தான் அணியில் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா இருவரும் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர். அடுத்து ராஜஸ்தான் அணி 190 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.