உலககோப்பை - 8 ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதம்.. இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு `17வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு செய்தது.. முதல் இன்னிங்ஸ் முடிவில் பங்களாதேஷ் அணி 256 ரன்கள் எடுத்தது. எனவே, இந்தியா 257 ரன் இலக்குடன் அடுத்து விளையாட ஆரம்பித்தது.
இந்தியா அணி பேட்டிங்
இந்தியா அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 12வது ஓவரில் ரோஹித் சர்மா (48) ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் விராட் கோலி களமிறங்க இந்தியா அணி வேகமாக ரன்களை குவிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் சுப்மன் கில் (53) 19வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் (19) தனது விக்கெட்டை இழந்தார்.. விராட் கோலி (103) , கேஎல் ராகுல் (34) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 261 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெஹிதி ஹசன் மிராஸ் (2), ஹசன் மஹ்மூத் (1) விக்கெட்டுகள் எடுத்தனர்.
கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு சதம் அடித்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பதற்காக சிங்கிள் ஓடி கடைசியாக வெற்றிக்கு இரண்டு ரன்கள் இருந்தபோது சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய 48வது சட்டத்தையும் விராட் கோலி பூர்த்தி செய்தார்..