IND vs NZ 1st ODI : வழக்கம் போல் பேட்டிங் சிறப்பு.. பவுலிங் படுமோசம்.. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வி!!
IND vs NZ 1st ODI : நியூசிலாந்தில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.
இந்தியா கிரிக்கெட் அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க நியூஸிலாந்து சென்றது. இதில் டி-20 தொடரை ஹர்டிக் பாண்டியா தலைமையில் விளையாடிய இந்திய அணி வென்றது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது.
ஷிகர் தவான் தலைமையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி இன்று ஆக்லாந்து மைதானத்தில் விளையாடியது.
இந்திய அணியின் நல்ல தொடக்கம் :
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பௌலிங்கை தேர்வுச் செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் 72 (77) மற்றும் சுப்மன் கில் 50(65) இருவரும் நல்ல தொடக்கத்தை தந்தனர்.
பின்பு களமிறங்கிய வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் சூர்யகுமார் யாதவ் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்தனர். அதே சமயம் நிதானமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 80(76) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கபட்ட சஞ்சு சாம்சன் 36(38) ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக வாஷிங்டன் சுந்தரின் 37 (16) அதிரடியால் இந்திய அணி 306 ரன்களை எடுத்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சௌதீயும் லாக்கி பெர்குசனும் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்கள். இதையடுத்து 307 ரன்கள் எனும் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
நியூஸிலாந்து வீரர்களின் மிரட்டலான ஆட்டம் :
அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பின் ஆலன் 22 (25) மற்றும் டெவோன் கான்வே 24 (42), டேரில் மிட்செல் 11(16) ஆகிய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க, பின்பு ஜோடி சேர்ந்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் டாம் லாதமும் சிறப்பாக விளையாடினார்கள்.
இருவரும் தங்கள் விக்கெட்டுகளை இழக்காமல் இறுதிவரை விளையாடி தங்கள் அணியின் வெற்றிக்கு வழிசெய்தனர். இதில் டாம் லாதம் 145 (104) ரன்களும் கேன் வில்லியம்சன் 94 (98) ரன்களும் அடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி தங்கள் இலக்கை 47.1 ஓவர்களில் அடைந்து முதல் ஒருநாள் போட்டியை வென்றார்கள்.
இந்தியாவின் சார்பில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இது இவரது சர்வதேச முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்த போதிலும், சரியாக பௌலிங் செய்யததாலும், நியூஸிலாந்து வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினாலும் தோல்வியை அடைந்தது என்றே கூறலாம். அடுத்த ஒருநாள் போட்டி
ஹாமில்டனில் வரும் ஞாயிற்றுகிழமை நடக்கவுள்ளது.