IND vs BAN 1st Test : கில், புஜாரா சதம்.. டிக்ளேர் செய்தது இந்திய அணி.. டார்கெட்டை எட்டுமா வங்கதேசம்!!
![IND vs BAN 1st Test : கில், புஜாரா சதம்.. டிக்ளேர் செய்தது இந்திய அணி.. டார்கெட்டை எட்டுமா வங்கதேசம்!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1365.jpg)
IND vs BAN 1st Test : இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த இந்திய அணியின் வீரர்கள் இருவர் சதம் அடித்த நிலையில், 258 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
வங்கதேசத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 404 ரன்கள் எடுத்து நேற்று இரண்டாம் நாளில் ஆல் அவுட் ஆகியது. இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களில் இன்று ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதோடு, முகமது சிராஜும் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 254 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் வங்கதேசம் அணி ஃபாலோ ஆன் ஆகியது.
ஆனால் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல், மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்த இந்தியா ஒருநாள் போட்டி போல விளையாடி, 61.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதில் இந்திய அணியின் ஷுப்மன் கில் சதமடித்து 110 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், புஜாரா சதமடித்து 102 ரன்களுடன் களத்தில் நின்றார். இதையடுத்து, 513 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் கைவசம் உள்ளதால், விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேச அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.