IND Vs AUS 1st Innings: இந்தியா அணிக்கு 200 ரன்கள் இலக்கு
![IND Vs AUS 1st Innings: இந்தியா அணிக்கு 200 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2400.png)
இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு 5வது ODI உலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணி பேட்டிங்
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 2வது ஓவரில் மிட்செல் மார்ஷ் (0) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க ஆஸ்திரேலியா மெதுவாக ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது டேவிட் வார்னர் (41) 16வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு மார்னஸ் லாபுசாக்னே அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். டேவிட் வார்னர் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் (46), மார்னஸ் லாபுசாக்னே (27), அலெக்ஸ் கேரி (0), கிளென் மேக்ஸ்வெல் (15), கேமரூன் கிரீன் (8), பாட் கம்மின்ஸ் (15), மிட்செல் ஸ்டார்க் (28), ஆடம் ஜம்பா (6) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் ஜோஷ் ஹேசில்வுட் (1) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜா (3), குல்தீப் யாதவ் (2), ஜஸ்பிரித் பும்ரா(2) , முகமது சிராஜ் (1) , ஹர்திக் பாண்டியா(1) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்(1) அவர்கள் தங்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியை திணற வைத்தனர்.