இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்..!! குழப்பத்தில் ரசிகர்கள்..!!

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மற்றும் டி20 அணியின் கேப்டனாக விளங்கும் ஹர்திக் பாண்டியா மீண்டும் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை சமீப காலமாக டி20 தொடர்களில் வழிநடத்தி வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டை சேர்ந்த இந்தியாவின் பாலிவுட் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்து அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் 2வது திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியாகியுள்ள தகவல் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது, ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஜோடியின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் மிகவும் சாதாரண நிலையில் நடைபெற்றது, எனவே தனது மனைவியை மிகவும் விமர்சையாக அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொள்ள போவதாக பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வை பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா ராஜஸ்தானில் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் காதலர் தினமான இன்று தனது காதல் மனைவியான நடாஷா ஸ்டான்கோவிக் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
இந்திய அணியின் வீரர்கள் கே.எல். ராகுல் மற்றும் அக்சர் படேல் அண்மையில் மிகவும் விமர்சையாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது தனது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்திய ரசிகர்கள் பலர் புதுமையாக இருக்கும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.