நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு
![நியூசிலாந்து அணிக்கு 283 ரன்கள் இலக்கு](https://www.sportspartans.com/assets/uploads/news-2393.jpg)
இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மதியம் 2 மணிக்கு முதல் ODIஉலகக் கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி பேட்டிங்
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் அமர்க்களமாக தங்களின் ஆட்டத்தை தொடங்கினர். ஆயினும் 7வது ஓவரில் டேவிட் மாலன் (14) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்க இங்கிலாந்து மெதுவாக ரன்களை எடுக்க தொடங்கியது. அப்போது ஜானி பேர்ஸ்டோவ் (12.5 ) வது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு ஹாரி புரூக் அணியின் வெற்றிக்காக பேட் செய்ய தொடங்கினார். ஜானி பேர்ஸ்டோவ் தொடர்ந்து ஹாரி புரூக் (25), மொயின் அலி (11), ஜோஸ் பட்லர் (43), லியாம் லிவிங்ஸ்டன் (20), சாம் கர்ரன் (14), கிறிஸ் வோக்ஸ் (11) எடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியின் இறுதியில் அடில் ரஷித் (15) , மார்க் வூட்(1)3 ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 282 ரன்கள் எடுத்துள்ளனர். போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேட் ஹென்றி (3), மிட்செல் சான்ட்னர் (2), டிரெண்ட் போல்ட் (1), கிளென் பிலிப்ஸ் (2) அவர்கள் தங்களின் சிறப்பான பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை திணற வைத்தனர்.