சேப்பாக்கத்தில் அதிரடி காட்டிய தோனி..!! இறுதி பந்து வரை சென்ற போட்டியில் ஏமாற்றம்..!! | csk batting vs rr ipl 2023
ஐபிஎல் 2023 தொடரில் இன்றைய போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற இறுதி பந்து வரை இரு அணிகள் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 வது போட்டியில் கேப்டனாக களமிறங்கிய எம் எஸ் தோனி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியில் ரன்கள் குவித்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் பதிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் இளம் அதிரடி ருதுராஜ் கெய்க்வாட் 8(10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சென்னை அணியின் முன்னணி வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் டெவன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.
சென்னை அணிக்காக அசத்தலாக விளையாடிய ரஹானே 31(19) ரன்கள் பதிவு செய்த [போது ராஜஸ்தான் பவுலர் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தொடர்ந்து பவுலிங்கில் அசத்திய அஸ்வின் மற்றொரு வீரரான சிவம் துபே 8 (9) விக்கெட்டையும் பெற்று அசத்தினார். அதே சமயத்தில் தொடக்கத்தில் இருந்து பொறுப்புடன் நிதானமாக விளையாடி வந்த டெவன் கான்வே ரன்கள் பெற்று வந்தார்.
அதன்பின் களமிறங்கிய சென்னை அணியின் முன்னணி வீரர்கள் உடனுக்குடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிறப்பாக விளையாடி வந்த கான்வே 37 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து சஹால் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சென்னை அணியின் கடைசி நம்பிக்கையாக களத்தில் இறங்கினார் கேப்டன் எம் எஸ் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா சிஸேர்கள் பறக்கவிட்ட அசத்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார், அடுத்து சிறப்பாக பந்து வீசிய சந்தீப் சர்மா யார்க்கர் வீசி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி 32*(17) ரன்கள் பதிவு செய்து களத்தில் இறுதிவரை முயன்றும் வெற்றியை பெற முடியாமல் போனது சென்னை அணி ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.