IND VS AUS TEST 2023 : புஜாரா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்களை போற்ற தவறி விட்டோம் ..!! அஸ்வின் கருத்து..!!
![IND VS AUS TEST 2023 : புஜாரா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்களை போற்ற தவறி விட்டோம் ..!! அஸ்வின் கருத்து..!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1731.jpg)
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர் அஸ்வின் செதேஷ்வர் புஜாரா மற்றும் முரளி விஜய் போன்ற முன்னணி வீரர்களை போற்ற தவறி விட்டதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் புஜாரா புதிய மைல்கல்லை அடைய உள்ள நிலையில் அஸ்வின் ஒரு நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றியை பெற்றது, அடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் டெல்லியில் இரு அணிகளும் பலபரிச்சை மேற்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்க உள்ள முன்னணி வீரர் செதேஷ்வர் புஜாரா 100 டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையை அடைய உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பதிவில், இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை போற்றுவது போல் டெஸ்ட் அணியின் முன்னணி வீரர்கள் செதேஷ்வர் புஜாரா மற்றும் முரளி விஜய் போன்ற வீரர்களை நாம் போற்ற தவறி விட்டோம் என்று கூறினார்.
இந்திய டெஸ்ட் அணியின் தூணாக திகழ்ந்து வரும் புஜாரா பல போட்டிகளில் எதிரணி பவுலர்களை சமாளித்து அதிக நேரம் களத்தில் பேட்டிங் செய்து இந்திய அணிக்கு உதவியுள்ளார், மேலும் குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து பவுலர்களை சமாளித்து உடலில் பல அடிகள் விழுந்த நிலையில் கலங்காது பேட்டிங் செய்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்ய உதவினார் என்று அஸ்வின் கூறினார்.
அதேபோல் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக பல போட்டிகளில் களமிறங்கி சதம் அடித்து அணிக்கு பல வெற்றிகளை முன்னாள் வீரர் முரளி விஜய் பெற்று தந்தார் என்பதில் ஐயமில்லை, மேலும் புதிய பந்தில் சிறப்பாக பேட்டிங் செய்வதில் முரளி விஜய் வல்லவர் ஆவார். இந்நிலையில் புஜாரா, முரளி விஜய் போன்ற சிறந்த வீரர்களை நாம் சரியாக அங்கீகரிக்க வில்லை என்று அஸ்வின் தனது பதிவில் கூறினார்.
இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலியை அடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை செதேஷ்வர் புஜாரா டெல்லி டெஸ்ட் போட்டியில் அடைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.