18 Years of Dhonism : 18 வருட வரலாறு.. ஒரு ஜாம்பவானின் சகாப்தம் தொடங்கிய தினம் இன்று.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!
![18 Years of Dhonism : 18 வருட வரலாறு.. ஒரு ஜாம்பவானின் சகாப்தம் தொடங்கிய தினம் இன்று.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!](https://www.sportspartans.com/assets/uploads/news-1406.jpg)
18 Years of Dhonism : ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில்,அதற்கான மினி ஏலம் இன்று (23.12.2022) கொச்சியில் இன்று நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவுள்ள 10-அணிகளும் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு கொண்டு வாங்குவார்கள் என்று ஐ.பி.எல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மினி ஏலம் நடக்கும் இன்றைய நாள் அனைத்து அணிகளுக்கும் மிகவும் முக்கியான நாள் என்றாலும், குறிப்பாக ஒரு அணிக்கு மிகவும் ஸ்பெசலான நாளாக உள்ளது.
ஐ.பி.எல் தொடரில் தங்களுக்கென தனித்துவத்தை வெளிப்படுத்தி 4-முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் இன்றைய நாள் மிகவும் நெருக்கமான நாள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் பல வெற்றிகளை பெற்று அனைத்து அணிகளும் பார்த்து வியக்கும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து உள்ளதற்கும் ஒரு முக்கியமான காரணமாக விளங்குபவர் யாரென்றால் கண்டிப்பாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இவர் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக முதன்முறையாக களமிறங்கிய நாள் (23.12.2004) இன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகள், பெற்று தந்த வெற்றிகள் கணக்கில் அடங்காது. அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அடையாளமாக இருப்பதும் மகேந்திர சிங் தோனி தான்.
ஐ.பி.எல் ஏலம் நடக்கும் இன்றைய நாள் சென்னை அணிக்கு மிகுவும் நெருக்கமான நாளாக அமைந்துள்ளது என்பதால் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கும் கடைசி தொடராக வரும் ஆண்டு நடக்கும் ஐபில் தொடர் இருக்கலாம் என்பதால் சென்னை அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமனதாக கருதப்படுகிறது.
அதனால் இந்த ஏலத்தில் அணிக்கு பயனளிக்கும் முக்கிய வீரர்களை வாங்கி தொடரில் சிறப்பாக விளையாடி 2023-ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்காக ஐ.சி.சி தொடரின் உலகக்கோப்பைகளை பெற்று தந்த மகேந்திர சிங் தோனி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். இந்த ஐ.பி.எல் 2023 சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றால் தோனிக்கு ஒரு சிறப்பான பிரியா விடையை அளிக்கும் விதமாக அந்த வெற்றி அமையும் என்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.