முதல் போட்டியில் டக் அவுட்டான பின் தோனி கொடுத்த அட்வைஸ்: சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி...
![முதல் போட்டியில் டக் அவுட்டான பின் தோனி கொடுத்த அட்வைஸ்: சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி...](https://www.sportspartans.com/assets/uploads/news-2283.jpg)
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறிய பின்னர், தோனி கொடுத்த அட்வைஸ் பற்றி சுரேஷ் ரெய்னா மனம் திறந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவத்திலும் சதம் அடித்த மிகச்சிறந்த வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். அதுமட்டுமின்றி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2021-வது ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடி உள்ளார். தோனியின் தளபதியாக களத்தில் பாய்ந்து வந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானபோது என்ன நடந்தது? என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவலை சுரேஷ் ரெய்னா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நான் 2005 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது அறிமுகமாகினேன். அந்த போட்டியின் முதல் பந்தியிலேயே முரளிதரனிடம் நான் ஆட்டம் இழந்தேன்.
அப்போது பெவிலியனை நோக்கி நடக்க தொடங்கிய நான் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்துக் கொண்டே வருத்தத்துடன் வெளியேறினேன். ஆனாலும் அந்த இன்னிங்ஸ் முடிந்த பிறகு தோனி, இர்ஃபான் பதான், ராகுல் டிராவிட் ஆகியோர் என்னிடம் வந்து இதற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்கள். அதிலும் குறிப்பாக தோனி என்னிடம் வந்து : பேட்டிங் முடிந்து விட்டது. அதனால் அதைப் பற்றி எதுவும் யோசிக்காதே.
தற்போது நீ பில்டிங்கில் கவனம் செய்து ஏதாவது செய் நிச்சயம் உனக்கு நம்பிக்கை பிறக்கும் என்று என்னிடம் தெரிவித்து சென்றார். அவர் கூறியபடியே அந்த போட்டியில் நான் அட்டப்பட்டுவை ரன் அவுட் செய்தேன். அப்போதுதான் எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட தகுதி இருக்கிறது என்பதை நானே உணர்ந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினேன் என ரெய்னா கூறினார்.
நான் என்னுடைய கிரிக்கெட் கரியரின் ஆரம்ப கட்டத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விளையாடினேன். அந்த வாய்ப்பு என்னுடைய பேட்டிங் திறனை வெளிக்காட்ட உதவியது என்று தெரிவித்துள்ளார்.