கடைசி போட்டியில் அதிர்ச்சித் தோல்வி.. செரீனா வில்லியம்ஸ் ஷாக்!!
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டவருமான செரீனா வில்லியம்ஸ், ஆர்தஸ் ஆஷே ஸ்டேடியத்தில் நடந்த அமெரிக்க ஓபனில் மூன்றாவது சுற்றில் அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.
நேற்று இரவு நடந்த இந்த ஆட்டம் அவரது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் இந்த போட்டி அதிக முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆகஸ்ட் மாதம், அவர் தனது ஓய்வை அறிவித்தார் மற்றும் தொழில்முறை டென்னிஸுக்கு உணர்ச்சிப்பூர்வமாக விடைபெறத் தயாராக இருந்தார்.
40 வயதான இவர், 1999 ஆம் ஆண்டு 17 வயது நிரம்பிய வீரராக அதே இடத்தில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார்.
இந்நிலையில், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற இடத்தில் நடந்த தனது கடைசி போட்டியில், அவர் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்தது அவருக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.