டென்னிஸிற்கு Good Bye.. கண்ணீருடன் விடைபெற்றார் பெடரர்!!
கண்களில் கண்ணீருடன் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸில் இருந்து வெளியேறினார். செப்டம்பர் 15, 2022 அன்று சுவிஸ் மேஸ்ட்ரோ ரோஜர் லாவர் கோப்பையுடன் விடைபெறுவதாக அறிவித்ததன் படி டென்னிஸ் விளையாட்டுக்கு பிரியாவிடை பெற்றார்.
20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் முழங்கால் காயம் காரணமாக 2021 விம்பிள்டன் காலிறுதிப் போட்டியின் முடிவில் இருந்து தொழில்முறை டென்னிஸில் இருந்து விலகியே இருந்தார்.
அவர் மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், அவர் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கும் டென்னஸி உலகிற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த லாவர் கோப்பை போட்டியில், சுவிஸ் மேஸ்ட்ரோ பெடரர் சர்வதேச அரங்கில் தனது கடைசி போட்டியில், தனது நல்ல நண்பரும் நீண்ட கால போட்டியாளருமான ரஃபேல் நடால் உடன் இணைந்து விளையாடினார்.
பெடரர் மற்றும் நடால் இணைந்த இந்த போட்டியை டென்னிஸ் உலகமே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் 4-6, 7-6 (7/2), மற்றும் 11-9 என்ற கணக்கில் பிரான்சின் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக் ஆகியோரிடம் தோல்வியடைந்தனர். இதன் மூலம் ரோஜர் பெடரர் தனது கடைசி போட்டியில் தோல்வியுடனேயே வெளியேறினார்.
போட்டிக்கு பிறகு கண்ணீருடன் பேசிய பெடரர், "நாம் நிச்சயமாக இதை கடந்து செல்வோம், இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சோகமாக இல்லை என்று தோழர்களிடம் சொன்னேன். இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை என் ஷூலேஸ்களை கட்டி மகிழ்ந்தேன். நன்றி" என்றார்.