போர்ச்சுகல் ஸ்விட்சர்லாந்தின் பரபரப்பான ஆட்டத்தின் முடிவு… நட்சத்திர வீரர் ரொனோல்டாவின் மாஸ் என்ட்ரி…!
பிபா உலகக்கோப்பை 2022 "சூப்பர் -16" நாக்கவுட் சுற்றின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் இன்று லுசைல் மைதானத்தில் மோதினார்கள்.உலகக்கோப்பை அரங்கில் முக்கிய அணியாக போர்ச்சுகல் கருதப்பட்டாலும் அந்த அணிக்குச் சமமாக ஆட்டத்தை சுவிட்சர்லாந்து அணி வெளிப்படுத்தும் என்ற எண்ணத்தில் போட்டியை ரசிகர்கள் எதிர் நோக்கினார்கள்.
இந்த போட்டி தொடங்கியதும் போர்ச்சுகல் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் "கிறிஸ்டியானோ ரொனால்டோ" இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என்பது தான். மேலும் பெப்பே தலைமையில் இறங்கிய போர்ச்சுகல் அணி தங்கள் தொடக்கத்தை மிகவும் மிரட்டலாகவே ஆரம்பித்தார்கள். சுவிட்சர்லாந்து அணி சார்பில் சிறப்பான பங்களிப்பு இருந்தபோதிலும் போர்ச்சுகல் அணியின் இளம் வீரர் கோன்காலோ ராமோஸ் போட்டியின் 17-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அடுத்தாக போட்டியின் 33-வது நிமிடத்தில் பெப்பே போர்ச்சுகல் அணியின் கோல் கணக்கைக் கூட்டினார். முதல் பாதியின் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி முன்னிலை வகித்தது.
இந்த நாக்அவுட் சுற்றின் இறுதி ஆட்டம் மேலும் சூடுபிடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டியின் இரண்டாவது பாதியில் 51-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ராமோஸ் தனது இரண்டாவது கோலை பதிவுசெய்தார்,அவரை தொடர்ந்து போர்ச்சுகல் வீரர் கெரிரோ ஒரு கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து கோல்களை பதிவு செய்து போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்து அணியை மிரள வைத்தது. இந்த நிலையில் போட்டியின் 58-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் மானுவல் அகன்ஜி தனது அணிக்காக முதல் கோலை அடித்தார்.
இந்த போட்டியில் களமிறங்கி கலக்கிய போர்ச்சுகல் வீரர் கோன்காலோ ராமோஸ் தனது "ஹாட்ரிக்" கோலை போட்டியின் 66-வது நிமிடத்தில் அடித்தார். இது உலகக்கோப்பை 2022 பதிவான முதல் ஹாட்ரிக் கோல் என்றும், போர்ச்சுகல் அணிக்காக இவர் விளையாடும் முதல் உலகக்கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தாக மகிழ்ச்சியின் உச்சியிலிருந்த போர்ச்சுகல் ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் வகையில் போட்டியின் 73-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ களத்தில் இறங்கினார். மேலும் அவர் இந்த போட்டியில் அடித்த ஒரு கோல் ஆப் சைடு என்று மறுக்கப்பட்டது.
போர்ச்சுகல் அணி வீரர் ரஃபேல் லியோ போட்டியின் கூடுதல் நேரத்தில் ஒரு கோலை அடித்தார். இதனால் முடிவாக 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றது. சுவிட்சர்லாந்து அணியின் இந்த உலகக்கோப்பை பயணமும் முடிவிற்கு வந்தது.போர்ச்சுகல் அணி சார்பாகக் காலிறுதி சுற்றுக்குச் செல்லும் முன் மிகப்பெரிய சம்பவத்தைச் செய்தது என்றே கூறலாம். மேலும் காலிறுதி போட்டியில் மொரோக்கோ அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.