FIFA World Cup 2022 : குரூப் டி பிரிவின் முதல் போட்டி டிரா.. கோல் அடிக்காமல் முடிந்த டென்மார்க்-துனிசியா ஆட்டம்!!
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நேற்றைய முதல் போட்டியில் குரூப் -டி பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் துனிசியா அணிகள் அல் ரய்யானில் உள்ள மைதானத்தில் விளையாடின.
டென்மார்க் அணி தனது பிரிவில் அடுத்ததாக கடந்த உலகக்கோப்பை சாம்பியன் அணியான பிரான்ஸை எதிர்கொள்ள உள்ள நிலையில், துனிசியா அணிக்கு எதிரான இந்த போட்டியை வெல்வது முக்கியம். அது அவர்களை புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறச் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முக்கியமான போட்டி ஆனால் முடிவு " டிரா " :
டென்மார்க் மற்றும் துனிசியா அணிகளுக்கு இடையே ஆன போட்டி கோல் ஏதும் அடிக்காமல் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன. இந்த முடிவு துனிசியா அணிக்கு மிகவும் பொருத்தமானது என்றே சொல்லலாம் .டென்மார்க் அணிக்கு எதிராக அவர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை விளையாடினார்கள். எனவே போட்டியின் இந்த முடிவு டென்மார்க் அணிக்கு சோகமாக இருந்தாலும் துனிசியா அணியின் முயற்சிக்கு வெற்றியாகவே அமைந்தது.
டென்மார்க் அணிக்கு ஏமாற்றமே :
டென்மார்க் அணிக்கு மிகவும் முக்கியான போட்டியாக இந்த போட்டி கருத்தப்பட்டதற்கு காரணம் இந்த போட்டியின் வெற்றி அவர்களை குரூப்-டி பிரிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் தங்கள் அணியை தக்கவைத்து கொள்ள மிகவும் உதவும் என்பதால் தான்.
மேலும் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியன் எரிக்சன்,ஜோகிம் ஆண்டர்சன்,ஹோஜ்ப்ஜெர்க் அணிக்கு வலு சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் உலகக்கோப்பை தொடரில் டென்மார்க் அணிக்கு இது ஒரு அதிர்ச்சியான போட்டியாகவே அமைந்தது.