FIFA World Cup 2022 : கேமரூன்-செர்பியா கடைசி வரை கடும் போட்டி.. அடுத்தடுத்து கோல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!!
FIFA World Cup 2022 : உலகக்கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் குரூப்-ஜி பிரிவில் இருக்கும் கேமரூன் மற்றும் செர்பியா அணிகள் அல் ஜனோப் மைதானத்தில் மோதின. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தோல்வியடைந்த நிலையில் கட்டாய வெற்றியை நோக்கி இந்த போட்டியில் களமிறங்கினார்கள். உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் 21-வது இடத்தில் செர்பியா அணியும் 41-வது இடத்தில் கேமரூன் அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தோற்றால் கண்டிப்பாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம் என்பதை அறிந்த இருஅணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்கும் முனைப்பில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். செர்பியா அணியின் ஆட்டம் அவர்களின் நம்பிக்கையைத் தெளிவாகக் காட்டியது.
கேமரூன் அணி வீரர்கள் அதற்கு இணையாக ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் போட்டியின் முடிவு அவர்களுக்குச் சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து விளையாடினார்கள். அதற்குப் பலனாகப் போட்டியின் 29-வது நிமிடத்தில் கேமரூன் அணி வீரர் ஜீன்-சார்லஸ் காஸ்டெல்லெட்டோ மிகவும் சுலபமாகத் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இதற்குப் பதிலடியாகப் போட்டியின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் செர்பியா அணியின் வீரர்கள் பாவ்லோவிக் மற்றும் மிலின்கோவிக்-சாவிக் அடுத்தது கோல்களை அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் முதல் பாதியின் இறுதியில் செர்பியா அணியை முன்னிலை பெறச் செய்தனர்.
இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் முழு வேகத்துடன் விளையாடியது. செர்பியா அணி.அதன் விளைவாக செர்பியா அணி வீரர் மிட்ரோவிகா போட்டியின் 53-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். இதனால் மைதானத்தில் செர்பியா அணியின் ரசிகர்கள் ஆரவாரம் அதிகரித்தது.கேமரூன் அணி தனது நிலையை மாற்ற மிகவும் வேகமாகச் செயல்பட்டு கோல் அடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
கேமரூன் அணி ஹொங்கலா பதிலாக அபூபக்கரை ஆட்டத்தின் உள்ள கொண்டுவந்தது. தனது அணி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அபூபக்கர் போட்டியின் 64-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். தொடர்ந்து மேலும் ஒரு கோலுக்கு அஸிஸ்ட் செய்து தனது அணி வீரர் எரிக் மாக்சிமை கோல் அடிக்கச் செய்தார்.
இதன்மூலம் 3-3 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியைச் சமன் செய்தது கேமரூன் அணி. இந்நிலையில், ஆட்டம் மிகவும் தீவிரமானது. இதற்குப் பிறகு மேலும் எந்த கோலும் இருஅணி வீரர்களும் அடிக்காமல் ஆட்டம் நகர்ந்தது. இந்த போட்டியின் இறுதியில் 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளுக்கும் புள்ளிகள் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டன. இந்த போட்டியை 2022 உலகக்கோப்பையின் விறுவிறுப்பான முதல் போட்டி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இரு அணி வீரர்களின் சிறப்பான ஆட்டம் இருந்தது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.