திடீர் சர்ப்ரைஸ்.. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கீரன் பொல்லார்ட், ரஷீத் கான்!!
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) குளோபல் இன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் புதிய எஸ்ஏ 20 மற்றும் யுஏஇ டி20 லீக்கிற்கான தங்கள் அணிகளின் கேப்டன்களை அறிவித்துள்ளது.
முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கீரன் பொல்லார்ட் மற்றும் ரஷித் கான் முறையே எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகியவற்றிற்கான கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளும் மும்பை இந்தியன்ஸ் குளோபல் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவைத் தவிர வெளிநாடுகளிலும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் குளோபல் சமீபத்தில் கீரன் பொல்லார்டை, அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து ஐபிஎல் 2023 சீசனுக்கான பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தது. இருப்பினும், ஒரு துணிச்சலான நடவடிக்கையாக, தற்போது பொல்லார்டை கேப்டனாக நியமித்து அவரது சிறப்பான சேவைக்கு வெகுமதி அளித்துள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர், 2010 இல் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து, அந்த அணிக்காக நீண்ட காலம் பணியாற்றிய வீரராக உள்ளார்.
மறுபுறம் ரஷித் கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். ரஷீத் கான் தலைமையில் எம்ஐ கேப் டவுன் அணி முதல் முறையாக நடக்கும் எஸ்ஏ 20 லீக்கில் கோப்பையை வெல்லும் என்று எம்ஐ குளோபல் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது.
ரஷித் உலகம் முழுவதும் டி20 வடிவத்தில் நிரூபிக்கப்பட்ட சாதனை படைத்துள்ளார் மற்றும் சமீபத்தில் குஜராத் டைட்டன்ஸ் உடன் ஐபிஎல் 2022 பட்டத்தை வென்றார்.