எனக்கே தெரியாதுங்க.. புஜாரா துணை கேப்டனானது குறித்து கே.எல்.ராகுல் விளக்கம்!!
காயம் அடைந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டதை அடுத்து, வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சட்டேஷ்வர் புஜாராவை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ தேர்வுக் குழு மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
சட்டோகிராமில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இருந்து ரோஹித் சர்மா விலக்கப்பட்டார். இருப்பினும், துணைக் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் கடும் சர்ச்சையான நிலையில், அது குறித்து ராகுல் தனது மௌனத்தை உடைத்து பேசியுள்ளார்.
ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் வருங்கால இந்திய தலைவர்களாக வரவிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ராகுலுடன் வீரர்களின் பட்டியலில் பண்ட் இருந்தார். புஜாரா இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக கூட இல்லை. உண்மையில் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் நீக்கப்பட்டார். அதன் பிறகு இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா லெவன் அணிக்கு மீண்டும் ஆடினார்.
இந்நிலையில், நேற்று பிசிசிஐ எடுத்த முடிவை ட்விட்டரில் ரசிகர்கள் அபத்தமானது என்று அழைத்தனர். எனினும், இதுபோன்ற முடிவுகள் ஒரு வீரருக்கு அணியில் இருக்கும் பொறுப்பை மாற்றாது என்று ராகுல் தெளிவுபடுத்தினார். அதே சமயம் துணை கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் அவருக்கும் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இன்று சட்டோகிராமில் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் கூட்டத்தில் இதை கூறினார்.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 முதல் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 22 ஆம் தேதி மிர்பூரில் நடைபெறுகிறது.
இதற்கிடையில், ரோஹித்துக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டார். மேலும், காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சவுரப் குமார் மற்றும் நவ்தீப் சைனி, ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.