சர்வதேச அரங்கில் 73-வது சதம் விளாசினார் விராட் கோலி..! ரசிகர்கள் மகிழ்ச்சி..!
இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ரன் மெஷின் கோலி தனது 45-வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நல்ல ஆரம்பத்தை அளித்தார்கள் ,அதன்பின் நிதானமாக விளையாடிய விராட் கோலி 80 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார்.இது சர்வதேச போட்டிகளில் கோலியின் 73-வது சதம் ஆகும்.
இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் இலங்கை அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.இதற்கு முன்னர் இலங்கை அணிக்கு எதிராக 8 சதங்கள் அடித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் மற்றும் விராட் கோலி இருவரும் சம நிலையில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார், இரண்டாவது இடத்தில் 19 சதங்களுடன் கோலி இருந்தார் .இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கோலி சச்சின் உடன் முதல் இடத்தை பகிர்ந்து உள்ளார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 1-சிக்ஸர் மற்றும் 12-பௌண்டரிகள் உட்பட 113(87) ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 373-7 ரன்களை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.