வீரரை ஒரே தொகைக்கு ஏலம் கேட்டால் என்னாகும்.. ஐபிஎல்லின் டை பிரேக்கர் விதி பற்றி தெரியுமா..?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனுக்கான ஏலம் இன்று (டிசம்பர் 23) நடைபெறும் நிலையில், பெரிய அணிகளும் அவற்றின் உரிமையாளர்களும் கொச்சியில் ஏலப் போருக்குத் தயாராகி வருகின்றனர்.
சாம் கர்ரன், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற பெரிய பெயர்கள் ஏலத்தில் இருப்பதால், உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏலப் போரை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஃபிரான்சைஸ்களில் பணம் இல்லாமல் போனால், இரண்டு அணிகள் ஒரே தொகையில் நின்றால் என்ன ஆகும்?
டை-பிரேக் விதி என்றால் என்ன?
பிசிசிஐயால் வழங்கப்படும் படிவத்தில், ஒரு மௌனமான எழுத்துப்பூர்வ ஏலத்தை ("டைபிரேக் ஏலம்") சமர்ப்பிக்கும்படி வீரருக்கான மேட்சிங் ஏலத்தை எடுத்த ஒவ்வொரு உரிமையாளரும் அழைக்கப்படுவர்.
ஐபிஎல் 2023 சீசனுக்கான வீரர்களின் சேவைகளைப் பாதுகாப்பதற்காக, பிசிசிஐக்கு (வீரருக்கு அல்ல) செலுத்தத் தயாராக இருக்கும், ஒரு தவணையில் செலுத்த வேண்டிய தொகையை டைபிரேக் ஏலம் குறிப்பிடும்.
டைபிரேக் ஏலம் என்பது பிசிசிஐக்கு ஃப்ரான்சைஸி செலுத்தத் தயாராக இருக்கும் தனித் தொகையாகும். மேலும் இது தொடர்புடைய ஃப்ரான்சைஸியின் சம்பள வரம்பில் இருந்து கழிக்கப்படாது. டைபிரேக் ஏலத் தொகைக்கு வரம்பு இல்லை.
அணிகள் டை பிரேக் ஏலத்தை சமர்ப்பித்த பிறகு, பிசிசிஐ எழுதப்பட்ட டைபிரேக் ஏலத்தைத் திறக்கும். மேலும் அதிக டைபிரேக் ஏலத்தை சமர்ப்பித்த அணிக்கு வீரர் வழங்கப்படுவார். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அதிக டைபிரேக் ஏலங்கள் சமமாக இருந்தால், வெற்றியாளர் இருக்கும் வரை அந்தச் செயல்முறையை மீண்டும் செய்ய அதிக ஏலதாரர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். டைபிரேக் ஏலத் தொகை அறிவிக்கப்படாது.