Representative Image.
IPL 2023 : இந்தியன் பிரீமியர் லீக்கில் கடந்த ஆண்டு மோசமாகசெயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு மினி ஏலத்தில் தங்கள் அணியில் சில மாற்றங்களைச் செய்ய உள்ளதாகவும், சில வீரர்களை கழற்றிவிட திட்டமிட்டுள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு (2021), ஆரஞ்சு தொப்பியை கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சர்வதேச டி20 தரவரிசையில் முன்னணியில் இருந்த டெவோன் கான்வே உள்ளிட்ட முன்னை வீரர்களையும், அனுபவம் வாய்ந்த ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, மொயின் அலி, டுவைன் பிராவோ மற்றும் டுவைன் பிராவோ ஆகியோருடன், கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையில் 2022 ஐபிஎல்லை தொடங்கியது.
மேலும் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே, மூத்த வீரர் சுரேஷ் ரெய்னாவை கைகழுவியது. மேலும் அவரை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வர எந்த ஆர்வமும் காட்டப்படவில்லை. இறுதியில் ஐபிஎல் 2022 லீக் கட்டத்தில் விளையாடிய சிஎஸ்கே 14ல் 4ல் மட்டும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்தைப் பிடித்தது.
அவர்களின் அணியில் பல பெரிய பெயர்கள் இருப்பதால், ஐபிஎல் 2023 மினி-ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் வீரர்களைப் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் (எதிர்பார்ப்பு)
கடந்த சீசனில் ஏமாற்றம் அளித்ததால், சிஎஸ்கே அணி நிர்வாகம் தங்களுக்கு மிகவும் பிடித்த சிலரை வெளியேற்றுவதன் மூலம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களில் அம்பதி ராயுடு அல்லது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் போன்ற சில பெரிய பெயர்கள் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்: வெளியேற்ற உள்ள வீரர்கள் பட்டியல் (எதிர்பார்ப்பு)
ஐபிஎல் 2023 மினி ஏல விவரங்கள்
கடந்த ஆண்டு மெகா ஏலம் மற்றும் அனைத்து அணிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிப்புகளுக்குத் தயாராகிவிட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கடந்த ஆண்டு விற்கப்படாத வீரர்கள் மற்றும் அந்தந்த உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்ட வீரர்களைக் கொண்ட மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.