IPL 2023 : ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்ட சிஎஸ்கே.. கீரன் பொல்லார்டை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்!!
IPL 2023 : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள், வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐக்கு சமர்ப்பித்துள்ளன.
தக்கவைப்பு மற்றும் வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலிலிருந்து மிகப்பெரிய செய்தி என்னவென்றால், ஐபிஎல்லின் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து கீரன் பொல்லார்ட் விடுவிக்கப்பட்டார். சிஎஸ்கே ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்துக் கொண்டு, கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை விடுத்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டைத் தவிர, ஃபேபியன் ஆலன் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரையும் விடுத்துள்ளது. பொல்லார்ட் 2010 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடி வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது பெர்பார்மன்ஸ் மிக மோசமாக இருந்தது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெற உள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி பிசிசிஐ அனைத்து உரிமையாளர்களுக்கும் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க காலக்கெடுவாக இருந்தது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்கள் பட்டியலை பிசிசிஐக்கு சமர்ப்பித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மும்பை இந்தியன்ஸ் அணி 10 வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுத்துள்ளது. அதன்படி ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரூவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்த சீசனில் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.
அதேசமயம், ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், டைமல் மில்ஸ், மயங்க் மார்கண்டே, மற்றும் ஹிருத்திக் ஷௌகின் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஒன்பது வீரர்கள் தக்கவைக்கப்பட்டு, 4 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, சிவம் துபே, ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்கள்.
அதேசமயம், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, நாராயண் ஜெகதீசன் மற்றும் நாராயண், மிட்செல் சான்ட்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.