டி20 உலகக் கோப்பை 2022: அரையிறுதித் தேர்வில் இந்தியா? ஹபிபுல் பஷரின் அறிவிப்பு…

டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வரும் நிலையில், இதில் பங்கேற்ற அணிகள் அனைத்தும் அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்ததைச் செய்து வருகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் முன்னாள் கேப்டனாக விளங்கிய ஹபிபுல் பஷார், இந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நான்கு அரையிறுதிப் போட்டியாளர்களைக் கணித்துள்ளார்.
அதன் படி, ஹபிபுல் பஷார் கூறியதாவது, “இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும், அரையிறுதிக்கு தகுதிபெற முன்னிலையில் உள்ளன. அதே சமயம் மற்ற அணிகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை இரண்டுமே வலுவான அணிகளாக இருப்பினும், இவற்றைத் தோற்கடிக்க முடியாதவை அல்ல. இதில், ஏ பிரிவில் நிலைமை மிக தந்திரமானதாக இருப்பதால், குரூப் நிலைமையை கடைசி வரை அதாவது ஆட்டம் முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
பி பிரிவில், தென்னாப்பிரிக்கா தகுதி பெறும். இருப்பினும் எந்த அணி முன்னேறும் என்பதைப் பார்க்க இந்தியா Vs வங்கதேசம் ஆட்டம் முடியும் வரை காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், அவர், “இதற்கிடையில், இன்று வங்கதேசத்தை தனது குழு நிலை மோதலில் இந்தியா எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியத் தழுவி வங்கதேசத்திடம் மோத உள்ளது. இந்த இரு அணிகளும் வரவிருக்கும் இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற முயற்சிக்கும். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றோர் போட்டியில் நல்ல தொடர்பில் உள்ளனர். இவர்கள் அணிக்கு வெற்றி வாகையைச் சூட விரும்புகிறார்கள்” என்று கூறினார்.