ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு உள்ள செக்…! எச்சரித்த கங்குலி..!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று சூசகமாக கருத்தை ஒன்றை பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் ஆனா விராட் கோலி தற்போது தனது சிறந்த பார்மில் உள்ளார், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்,ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி சற்று நிதானமாக விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தனது பார்மை இழந்து ரன்கள் எடுக்க முடியாமல் திணறிய காலத்தில் கங்குலி அவருக்கு தேவையான நேரத்தை கொடுங்கள் கண்டிப்பாக பழைய பார்மிற்கு வருவார் தனது அதிரடி ஆட்டத்தை தொடருவார் என்று கூறியிருந்தார். அதன்பின் சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்த கோலி ஆசிய கோப்பையில் பங்கேற்று சதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணியின் முன்னணி வீரரான கோலி தனது பழைய பார்மிற்கு திரும்பி விட்டேன் என்று அனைவருக்கும் உணர்த்தும் வகையில் ஒருநாள் தொடர்களில் சதங்கள் அடித்து அசத்தினார், தற்போது மறுபடியும் அவர் டெஸ்ட் தொடரில் சற்று கவனமாக விளையாட வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.
அதற்கு காரணம் கோலி கடைசி ஆறு மாதங்களில் 2 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி உள்ளார்.இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நல்ல பார்மில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வேண்டும் ஆனால் கோலி போன்ற முன்னணி வீரர் சிறப்பாக வெளியாட வேண்டியது மிகவும் அவசியம் என்று கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணி அடித்து ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது, இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றியை பொறுத்து தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் இந்திய அணியின் வாய்ப்பு முடிவாகும் என்பதால் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.