எங்கும் தோனி மயம்.. தண்ணீர் பாட்டிலில் கூட.. வைரலாகும் விராட் கோலியின் இன்ஸ்டா பதிவு!!
எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி இடையேயான நட்புறவு அனைவரும் அறிந்ததே. விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசும்போது இதைப் பற்றி அதிகம் சிலாகிப்பது வழக்கம். தோனி தனது கேரியரின் முடிவில் இந்திய கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, கோலி, என்ன இருந்தாலும் தோனி தான் எப்போதும் தனது தலைவராக இருப்பார் என்று கூறியிருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், சந்தையில் முன்னணி பிராண்டுகள் என்று வரும்போது தோனி இன்னும் விளம்பர நிறுவனங்களால் அதிகம் விரும்பப்படும் விளையாட்டு வீரராகவே உள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி கின்லே வாட்டர் பாட்டிலில் தோனியின் படத்தைக் கண்டபோது வியந்தார். டி20 உலகக் கோப்பையில் சாதனைகளை முறியடித்த கோலி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கோவிலுக்கு சென்றார்.
அந்த பயணத்தில், அவர் தண்ணீர் பாட்டிலில் எம்.எஸ்.தோனியின் படத்தைப் பார்த்தார் மற்றும் இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அவர் எங்கும் இருக்கிறார். தண்ணீர் பாட்டில் கூட தோனி தான்" என்று கூறி, அந்த படத்தை பகிர்ந்தார்.
அவர் பகிர்ந்து தான் தாமதம், உடனே இந்த பதிவு ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், விராட் கோலி அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடுவார். டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட்களில் கவனம் இப்போது மாறியுள்ளது.
தோனியைப் பொறுத்தவரை, அவர் ஐபிஎல்லில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்த சீசனில் விளையாட உள்ளார். சமீபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்த அவர், விரைவில் ஐபிஎல் 16வது சீசனுக்கு தயாராகவுள்ளார்.